×

ஆறுமுகநேரியில் பைக்குகள் மோதல்: காய்கறி வியாபாரி பலி

ஆறுமுகநேரி,டிச.16: ஆறுமுகநேரியில் இரண்டு பைக்குகள் நேர்க்குநேர் மோதிய விபத்தில் காய்கறி கடை உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை, கீழத்தெருவை சேர்ந்தவர் சரவணபழம் மகன் பெரியசாமி(55). இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2மகன், 1 மகள் உள்ளனர். பெரியசாமி ஆறுமுகநேரி சந்தை அருகே உள்ள மெயின் ரோட்டில் காய்கறி கடை நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 10.30மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு தனது பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். ஆறுமுகநேரியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்திற்கு அருகே வரும் போது எதிரே வந்த மற்றொரு பைக் எதிர்பாராமல் மோதியது. இதில் பெரியசாமி தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த ஆறுமுகநேரி போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து பெரியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய பைக்கை ஓட்டிவந்த ஆறுமுகநேரி திசைகாவல் தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் வெற்றிவேல்(42) என்பவரும் காயமடைந்தார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பெரியசாமி மகன் சின்னஅழகு அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி எஸ்.ஐ. தமிழ்செல்வன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

The post ஆறுமுகநேரியில் பைக்குகள் மோதல்: காய்கறி வியாபாரி பலி appeared first on Dinakaran.

Tags : Arumuganeri ,Arumukaneri ,Moolakarai, Thoothukudi district ,Dinakaran ,
× RELATED ஐஐடி நுழைவு தேர்வு 2வது சீசனில்...