×

பாராளுமன்றத்தில் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது: விஜய்வசந்த் எம்பி அறிக்கை

சென்னை: கன்னியாகுமரி எம்பி விஜய்வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: பாராளுமன்றத்தில் விஷமிகள் புகுந்து நடத்திய தாக்குதல் இந்திய ஜனநாயகம் மீதான தாக்குதல். பாராளுமன்ற கூட்ட தொடர் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்த செயல் பாதுகாப்பு மீதான சந்தேகத்தை எழுப்புகிறது. மக்கள் பிரதிநிதிகள் கூடும் இடத்தில் பாதுகாப்பு பலவீனமாக இருப்பது அதிர்ச்சி உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்புகிறது. குறிப்பாக, இன்றைய தினம் பாராளு மன்றத்தில் 2001ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நாள்.

அதை கருத்தில் கொண்டு பாதுகாப்பை அரசு பலப்படுத்தியிருக்க வேண்டும். உளவுத்துறையின் மெத்தனமே சம்பவத்துக்கு காரணம். தலைவர் ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதியில் விஷமிகள் தாக்குதல் நடத்தியிருப்பது கவலையளிக்கிறது. இதுகுறித்து விசாரிக்க குழுவை அரசு அமைக்கவேண்டும். இதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post பாராளுமன்றத்தில் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது: விஜய்வசந்த் எம்பி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Parliament ,Vijayvasant ,Chennai ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டு முகவர் மசோதாவை சட்டமாக்க...