×

மாடு மேய்த்தபோது முதியவர் உயிரிழப்பு

திருத்தணி: திருத்தணி அடுத்த பொன்பாடி பள்ளக்காலனியைச் சேர்ந்தவர் பரமானந்தம் (65). இவர் நேற்று காலை மாடுகளை மேய்ப்பதற்காக வயல்வெளிக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது திடீரென பரமானந்தம் சுருண்டு கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாடு மேய்த்தபோது முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Paramanandham ,Ponpadi Pallakalani ,
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து