×

நீதிமன்ற ஊழியரிடம் நகை பறித்த நபர்கள்

 

சேலம், டிச.12: சேலம் கன்னங்குறிச்சி பச்சாரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் (35). சேலம் நீதிமன்றத்தில் கிளார்க்காக வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு 11 மணி அளவில் அவரது நண்பர் ஒருவருடன் செவ்வாய்பேட்டைக்கு வந்தார். இங்குள்ள வெங்கட்டப்பன்ரோட்டில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு, பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது டூவீலரில் வந்த 2 பேர் தகராறில் ஈடுபட்டதுடன், ஆனந்தன் அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்தன், செவ்வாய்பேட்டை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சம்பவ இடம் விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

The post நீதிமன்ற ஊழியரிடம் நகை பறித்த நபர்கள் appeared first on Dinakaran.

Tags : Salem ,Anandhan ,Kannangurichi Bacharot ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...