×

மழையால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி

 

புழல், டிச. 12: தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டில் உள்ள திருவள்ளுவர் தெரு, கருணாநிதி தெரு, காந்தி தெரு ஆகிய பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் மிக்ஜாம் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு புழல் ஒன்றிய விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் ஒன்றிய செயலாளரும், 6வது வார்டு ஊராட்சி உறுப்பினருமான தாஸ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும், ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சாமுவேல், கண்ணன், நவீன், கவுதம், கார்த்திக், ரஞ்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

The post மழையால் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Tirthankaraiyampattu panchayat ,Senkunram ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்..!!