×

வீட்டு முன் நிறுத்திய டூவீலர்களில் திடீர் தீ

 

சேலம், டிச.11: சேலம் பள்ளப்பட்டியில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த டூவீலர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் பள்ளப்பட்டி 3 ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலிஸ். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஜீவா. இருவரும் வீட்டின் முன்பு தங்களுக்கு சொந்தமான டூவீலர்களை நிறுத்தி இருந்தனர். இந்த டூவீலர்கள் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைக்க முயன்றனர்.

அதற்குள் டூவீலர்கள் பெரும் பகுதி எரிந்து சேதமானது. இதுகுறித்த புகாரின் பேரில், பள்ளப்பட்டி போலீசார் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக யாரேனும் டூவீலர்களுக்கு தீ வைத்து சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமாராவை பார்த்து ஆய்வு செய்து வருகின்றனர்.

The post வீட்டு முன் நிறுத்திய டூவீலர்களில் திடீர் தீ appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Pallapatti ,
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை