×

ஈடி சிறப்பு இயக்குனர் ஆஜராக டெல்லி கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு நடந்த டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றது. இந்த வழக்கு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனை தொடர்ந்து அதிருப்தி தெரிவித்த டெல்லி நீதிமன்றம், யாருக்கும் விசாரணையில் ஆஜராவதில் இருந்து எந்த சலுகையும் இல்லை என்று தெரிவித்தது. மேலும் 8ம் தேதி (நாளை) பிற்பகல் அமலாக்கத்துறை சிறப்பு இயக்குனர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ஈடி சிறப்பு இயக்குனர் ஆஜராக டெல்லி கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Delhi Court ,ED Special ,NEW DELHI ,ENFORCEMENT DEPARTMENT ,DELHI RIOT ,ED ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு