×

மழை வெள்ளத்தை கையாள்வதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது: டி.டி.வி.தினகரன்

சென்னை: மழை வெள்ளத்தை கையாள்வதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது என அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார். வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று கரையை கடந்த நிலையில் சென்னையின் பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ள பாதிப்பிலிருந்து மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பல்வேறு அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மழை வெள்ளம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மழை வெள்ளத்தை கையாள்வதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. நல்ல வேலை மக்களெல்லாம் காப்பாற்றப்பட்டுள்ளனர். நல்ல அதிகாரிகள் செயல்பாட்டால் சென்னை தப்பியது. தொடர்ந்து நல்ல முறையில் செயல்பட்டு விரைவிலே இந்த பேரிடரிலிருந்து சென்னை மக்கள் சகஜ நிலைக்கு திரும்புவதற்கு அரசாங்கம் முழு முயற்சியிலே போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் இவ்வாறு தெரிவித்தார்.

The post மழை வெள்ளத்தை கையாள்வதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது: டி.டி.வி.தினகரன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,DTV ,CHENNAI ,AAMUK ,General Secretary ,T.D.V.Thinakaran ,Bengal ,
× RELATED மலேசியாவில் வெல்டர், கட்டிட பணிக்கு...