×

பால் வினியோகத்தில் ஒத்துழைக்காத விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

சென்னை: பால் வினியோகத்தில் ஒத்துழைக்காத விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை, சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பதனிடும் நிலையங்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. அம்பத்தூர் பால்பண்ணை முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால் 5 லட்சம் லிட்டர் பால் தயாரிப்பு என்பது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிற மாவட்டங்களிலிருந்து இருந்து சென்னைக்கு பால் வரவழைக்கப்பட்டு விநியோகித்து வருகிறோம்.

சென்னையில் தட்டுப்பாடு இல்லாமல் பால் விநியோகம் செய்ய பால் மற்றும் பால் பவுடர் கையிருப்பு உள்ளது. மாநகராட்சி பகுதிகளுக்கு சென்னை பெருநகர நிர்வாகத்தோடு இணைந்து பால் விநியோகம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சிரமங்களை பொருட்படுத்தாமல் மக்களுக்கு பால் விநியோகம் செய்ய முயற்சியில் ஈடுபட வேண்டும். ஒத்துழைப்பு தராத விற்பனையாளர்கள் மற்றும் லாரி ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post பால் வினியோகத்தில் ஒத்துழைக்காத விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister ,Mano Thangaraj ,Chennai ,Dairy ,Dinakaran ,
× RELATED வெகுஜன விரோதியாக உலக மக்களால்...