×

லாரி பட்டறையில் செல்போன் திருட்டு

தர்மபுரி, டிச.4: அரூர் அடுத்த செல்லம்பட்டியை சேர்ந்தவர் பாபு (37). இவர் லாரி பட்டறை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 25ம் தேதி மதியம் பழுது பார்க்க வந்த லாரியை பட்டறையில் நிறுத்திவிட்டு, அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றார். திரும்பி வந்துபார்த்த போது லாரியில் வைத்திருந்த செல்போனை மர்ம நபர் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அரூர் போலீஸ் ஸ்டேஷனில் பாபு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post லாரி பட்டறையில் செல்போன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Babu ,Chellambatti ,Arur ,Dinakaran ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு