×

கொள்ளிடம் அருகே மழையால் சாலையோரத்தில் இறங்கிய சரக்கு லாரி

 

கொள்ளிடம்,டிச.2: கொள்ளிடம் அருகே மழை பெய்து கொண்டிருந்ததால் சரக்கு லாரி ஒன்று சாலை ஓரம் இறங்கியது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து சிதம்பரம் நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் அருகே தைக்கால் என்ற இடத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது மழை தூறல் இருந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மதகு பகுதியில் லாரியின் இரு சக்கரங்கள் சிக்கி லாரி நிறுத்தப்பட்டது. இதனை அறிந்த தைக்கால் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் வியாபாரிகள் அங்கு ஓடி வந்து லாரியை பாதுகாப்பாக மீட்டனர். லாரி சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டதால் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரும் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கொள்ளிடம் அருகே மழையால் சாலையோரத்தில் இறங்கிய சரக்கு லாரி appeared first on Dinakaran.

Tags : Kollidam ,Kollidum ,Mayiladuthurai District ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பரப்பளவு குறைந்தது