×

நிலத் தகராறில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே கீரனூரில் நிலத் தகராறில் கணவன், மனைவிக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. நிலத் தகராறில் சங்கரலிங்கம் உள்பட 3 பேர் வீடு புகுந்து வெட்டியதில் நாராயணகுமார், அவரது மனைவி படுகாயம் அடைந்தனர். நாராயணகுமார், சங்கரலிங்கம் இடையேயான நிலத் தகராறு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே இதே பிரச்னையில் சங்கரலிங்கம் தரப்பினர் நாராயணகுமாரை தாக்கி தங்க செயினை பறித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நிலத் தகராறில் தம்பதிக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Kiranur ,Thiruchendur ,Sangaralingam ,Dinakaran ,
× RELATED மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்