×

வீட்டில் கட்டிவைத்த 2 ஆடுகள் திருட்டு

பாப்பாரப்பட்டி, டிச.1: பென்னாகரம் தாலுகா, பாப்பாரப்பட்டி அடுத்த திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். இவர் பனைகுளம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் எடையாளராக பணியாற்றி வருகிறார். மாதேஷ் கடந்த 2 நாட்களுக்கு முன், வேலைகள் முடிந்து மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றார்.

அப்போது அவரது வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த 2 ஆடுகள் திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மாதேஷ், பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஆடுகளை திருடிச்சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

The post வீட்டில் கட்டிவைத்த 2 ஆடுகள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Papparapatti ,Mathesh ,Tirumalwadi ,Papparapatti, Bennagaram taluk ,Panaikulam ,Dinakaran ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு சாவு