×

மக்கள் குறை தீர் கூட்டத்தில் 287 மனுக்கள் குவிந்தன

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 287 மனுக்கள் குவிந்தன. கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சரயு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 287 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்காக சமூக தரவுகள் பதிவு 2023 குறித்த விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் ஆய்வாளர் சாதனைக்குறள், தனித்துணை கலெக்டர் பன்னீர்செல்வம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறை தீர் கூட்டத்தில் 287 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Tags : People's Grievances ,Krishnagiri ,People's Grievance Day ,Krishnagiri Collector's Office ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்