மதுரை: கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ ரூ.1000-க்கும், ரூ.800-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.900-லிருந்து ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபத் திருவிழா, தொடர் மழையால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
The post கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு! appeared first on Dinakaran.