×

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 27ம் தேதி உருவாகும்

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் வரும் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். அது மேலும் வலுப்பெற்று 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை 30ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் ஓரளவு மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

The post புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 27ம் தேதி உருவாகும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,South Andaman Sea ,South East Bay of Bengal ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...