×

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 2 விமானங்களின் புறப்பாடு 4 மணி நேரம் தாமதம்: 300க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி

சென்னை: சென்னையில் இருந்து டெல்லி செல்லும் தனியார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் மாலை 6:25 மணிக்கு 154 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் எதிர் முனையில் வர வேண்டிய விமானம் தாமதமாக வருவதால், இந்த விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இரவு 8 மணி வரையில் விமானம் புறப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிறுவன ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அப்போதும் புறப்படவில்லை. இந்நிலையில், சென்னையில் இருந்து இரவு 7 மணிக்கு, அகமதாபாத் செல்ல வேண்டிய அதே தனியார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், இரவு 10 மணி வரையில் புறப்படவில்லை. அந்த பயணிகளும், டெல்லி பயணிகளுடன் சேர்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 6:25 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய விமானம், 4 மணி நேரம் தாமதமாக இரவு 10:35 மணிக்கு புறப்பட்டு சென்றது. அதேபோல் இரவு 7 மணிக்கு அகமதாபாத் செல்ல வேண்டிய விமானம், இரவு 10:50 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் 300க்கும் மேற்பட்ட பயணிகள் அவதிப்பட்டனர்.

The post சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் 2 விமானங்களின் புறப்பாடு 4 மணி நேரம் தாமதம்: 300க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai Domestic Airport ,Chennai ,Private Airlines ,Delhi ,
× RELATED சென்னை உள்நாட்டு விமான முனையத்தில்...