×

பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, எர்ணாகுளம் இடுக்கி மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதில் பத்தனம்திட்டாவில் நேற்று முன்தினம் 2 மணிநேரத்தில் 210 மிமீ மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் தாழ்வான பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. சபரிமலையிலும் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை, வெள்ளப்பெருக்கால் சபரிமலை செல்லும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

 

The post பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bombay River ,Thiruvananthapuram ,Kollam ,Pathanamthitta ,Ernakulam ,Idukki ,Kerala ,Sabarimala ,
× RELATED மார்க்சிஸ்ட் மீது பொய் புகார் கொல்லம்...