×

வேப்பூர் அருகே 18 பவுன் நகை திருட்டு

வேப்பூர், நவ. 23: வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது உறவினரான மெகருன்னிசா என்பவர் சம்சுதீன் வீட்டிற்கு விருந்தினராக வந்து தங்கியுள்ளார். சம்பவத்தன்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது மெகருன்னிசா பையில் இருந்த 13 பவுன் தங்க நகையையும், சம்சுதீன் மனைவி சமிம் என்பவரது பையில் இருந்த ஐந்தரை பவுன் தங்க நகை என மொத்தம் 18.5 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மெகருன்னிசா மற்றும் அவரது உறவினர்கள் இது குறித்து வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து வேப்பூர் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post வேப்பூர் அருகே 18 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Vaypur ,Veypur ,Samsuddin ,Pasar village ,Megarunnisa ,Samsudeen ,Dinakaran ,
× RELATED பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது பைக்...