×

முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம்: தமிழக அரசு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைமூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2023-2024ம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திட்ட விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்பபடிவம் www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணையதள முகவரியில் யாவரும் பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. முழுமையாகபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.12.2023 நாளன்று மாலை 5.45 மணிக்குள்,”இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை-600 005″ என்ற முகவரிக்கு வந்துசேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது.

The post முழுநேர முனைவர் பட்டப் படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான ஊக்கத் தொகைத் திட்டம்: தமிழக அரசு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,CHENNAI ,Adi Dravidar and Tribal Welfare Department ,
× RELATED பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் 438...