×

மாநில அளவில் தீவிரவாதத்தை தடுக்க புதிய பிரிவை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: மாநில அளவில் தீவிரவாதத்தை தடுக்க புதிய பிரிவை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு என்பதை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபி தலைமையில் A.T.S. எனப்படும் தீவிரவாத தடுப்பு பிரிவு செயல்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

The post மாநில அளவில் தீவிரவாதத்தை தடுக்க புதிய பிரிவை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Tamil Nadu Police ,
× RELATED மலேசியாவில் வெல்டர், கட்டிட பணிக்கு...