×

பண்ணைவிளையில் உபவாச ஜெபக்கூட்டம்

ஏரல், நவ.21: ஏரல் அருகேயுள்ள பண்ணைவிளையில் தேசத்திற்கான பொதுவான உபவாச ஜெபம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பண்ணைவிளை சேகர குரு ஜான்வெஸ்லி தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற குருவானவர் தாமஸ், ஜெபம் செய்து உபவாச ஜெபத்தை தொடங்கி வைத்தார். ஞானமணி பாடல் வேளையை நடத்தியும், உபவாச ஜெபத்திற்கான குறிப்புகள் கொடுத்து ஜெபத்தை வழி நடத்தினார். ஜென்சன், ஜெயந்த் ஆகியோர் துதி ஆராதனை வேளையை நடத்தினர். இக்கூட்டத்தில் ஜார்ஜ் ஏசுதாசன் தேவ செய்தியளித்தார். குரு பொன்மனுவேல் நிறைவு ஜெபம் செய்து ஆசீர்வதித்தார். இந்நிகழ்ச்சியில் ஏரல் சேகரத் தலைவர் கிங்ஸ்லி, மன்னாரையன்தட்டு சேகர தலைவர் ஜான்சாமுவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற குரு சாமுவேல் ஜெபராஜ், ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் தங்கராஜன் டக்ளஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

The post பண்ணைவிளையில் உபவாச ஜெபக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Eral ,Pannavilai Sekara Guru Janvesli ,Pannavilai ,
× RELATED திருச்செந்தூர் கோயிலில் புதுமண...