×

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 6வது நாளாக சிகிச்சை மூளை நரம்பில் ரத்த அடைப்புகள் கண்டுபிடிப்பு: இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மீண்டும் பரிசோதனை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 6-வது நாளாக நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மூளை நரம்பில் ரத்த அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இரைப்பையிலும் கட்டிகள் இருப்பதால், குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் நேற்று மீண்டும் பரிசோதனை நடத்தினர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென கடந்த 15ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி உடல் மெலிந்து அவரால் நடக்க முடியாத அளவுக்கு இருக்கிறார். அவருக்கு கால் மரத்து போவதால் சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதையடுத்து எம்ஆர்ஐ ஸ்கேனும் எடுக்கப்பட்டது.

அதில், அவருக்கு மூளையில் உள்ள நரம்பில் ரத்த அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தான் கால் மரத்து போகிறது என மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று 6-வது நாளாக இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள், மீண்டும் பரிசோதனை செய்தனர். இது தவிர கழுத்து பகுதி சவ்வில் பாதிப்பு இருந்ததன் காரணமாக, நரம்பியல் துறை மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கணையத்தில் இருக்கும் கொழுப்பு கட்டியை கரைப்பது குறித்தும் நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.. அவருடைய உடல்நல பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாமா அல்லது மருந்து மாத்திரை மூலமே குணப்படுத்தி விடலாமா என்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 6வது நாளாக சிகிச்சை மூளை நரம்பில் ரத்த அடைப்புகள் கண்டுபிடிப்பு: இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மீண்டும் பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Chennai ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு!