×

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ்த்தேர் திருப்பூருக்கு நாளை வருகை; திமுகவினர் திரளாக பங்கேற்க அழைப்பு

 

திருப்பூர், நவ.21: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு முத்தமிழ்த்தேர் நாளை (22ம் தேதி) திருப்பூருக்கு வருவதை முன்னிட்டு திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என எம்எல்ஏ செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில், கலைஞரின் சாதனை தொகுப்புகள், புகைப்படங்கள் அடங்கிய முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி நாளை (22-ம் தேதி) திருப்பூர் மாவட்டத்திற்கு காலை 10 மணியளவில் வந்தடைகிறது. திருப்பூர் மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் பேருந்து நிலைய வளாகத்தில், திருப்பூர் மாநகர பொதுமக்கள், மாணவ, மாணவிகள் முத்தமிழ்த்தேர் ஊர்தியை பார்வையிட்டு, முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

அதுசமயம் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் எம்எல்ஏ செல்வராஜ் கூறியுள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முத்தமிழ்த்தேர் திருப்பூருக்கு நாளை வருகை; திமுகவினர் திரளாக பங்கேற்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Muthamither ,Tirupur ,DMK ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம்