×

ஆரணியில் சேதமடைந்த பேரூராட்சி அலுவலகம்: புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஆரணி பேரூராட்சியில் பழுதடைந்து காணப்படும் பேருராட்சி அலுவலக கட்டிடத்தை புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு 1991ம் ஆண்டு பேரூராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இங்குதான் குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி போன்ற வரிகள் செலுத்த மக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு வருவார்கள். இந்நிலையில் பேரூராட்சி கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டதால், இதன் அருகிலேயே வேறு கட்டிடம் கட்டப்பட்டது.

தற்போது இந்த கட்டிடமும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக் காலங்களில், பழைய பேரூராட்சி கட்டிடம் அருகில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் குப்பை அள்ளும் 3 சக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகிறது. மேலும் இந்த பழைய கட்டிடம் தற்போது பிளிச்சிங் பவுடர் மூட்டைகள் அடுக்கி வைக்கும் குடோனாக மாறியுள்ளது. எனவே பழைய பேரூராட்சி பழைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post ஆரணியில் சேதமடைந்த பேரூராட்சி அலுவலகம்: புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Damaged Municipal Office ,Arani ,Uthukottai ,Dinakaran ,
× RELATED குளோரினேஷன் செய்து சுத்தமான குடிநீர்...