×

விருதுநகர் கூட்டுறவுத்துறையில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர், நவ. 19: விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏதுவாக விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் 10.11.2023 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் vnrdrb.net என்ற இணையதளம் வழியாக மட்டுமே 1.12.2023 அன்று மாலை 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

இதற்கான எழுத்து தேர்வு 24.12.2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது. இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும்பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அரசாணைப்படியான இட ஒதுக்கீடு. இன சுழற்சி முறை, அவர்கள் தெரிவித்த முன்னுரிமை விருப்ப சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விருதுநகர் கூட்டுறவுத்துறையில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar Cooperative ,Virudhunagar ,Virudhunagar Zone Cooperative Societies ,Virudhunagar District Recruitment Center ,Virudhunagar Cooperatives ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...