×

இலுப்பூர் வருவாய் கோட்டத்தில் 3 கல்குவாரிகள் ரூ.2.16 கோடிக்கு ஏலம்

 

புதுக்கோட்டை, நவ.17: இலுப்பூர் வருவாய் கோட்டத்தில் 3 கல்குவாரிகள் ரூ.2.16 கோடிக்கு ஏலம் போனது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 21 கல்குவாரிகளுக்கான ஏலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில் குவாரிகளுக்கான தொகை பத்து மடங்கு வரை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதால் 21 கல்குவாரிகளில் மூன்று குவாரிகள் மட்டும் ரூ. 2 கோடியே 16 லட்சத்திற்கு ஏலம் போன நிலையில் மீதமுள்ள 18 கல்குவாரிகளை ஏலம் எடுக்க வந்தவர்கள் ஏலம் எடுக்காமலேயே திரும்பிச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் 24 கல்குவாரிகள் உள்ளன. இந்த கல்குவாரிகளில் மூன்று குவாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்தில் 21 கல்குவாரிகளுக்கான ஏலம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குவாரிகளை ஏலம் எடுக்க ஏராளமானோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில் கல்குவாரிகளுக்கு வழக்கமாக நிர்ணயிக்கும் தொகையை விட பத்து மடங்கு அதிகமாக ஏலத்தொகை நிர்ணயம் செய்ததால் குவாரிகளை ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் 21 கோரிகளில் 3 குவாரிகள் மட்டும் 2 கோடியே 16 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 18 கல்குவாரிகளுக்கான தொகை அதிகளவு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் குவாரிகளை ஏலம் எடுக்க வந்தவர்கள் ஏலம் எடுக்காமலேயே அங்கிருந்து திரும்பி சென்றனர்.

The post இலுப்பூர் வருவாய் கோட்டத்தில் 3 கல்குவாரிகள் ரூ.2.16 கோடிக்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Ilupur ,Pudukottai ,Pudukottai district ,Dinakaran ,
× RELATED இலுப்பூரில் பதுக்கல் ஆற்று மணல் பறிமுதல்