×

நெல்லை வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை

நாகர்கோவில்: நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என விஜய்வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று குமரி மாவட்டம் வருகை தந்த ரயில்வே கோட்டம் மேலாளர் சர்மாவை சந்தித்து கன்னியாகுமரி மாவட்ட மக்கள் சார்பாக ரயில்வே துறை சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை விஜய்வசந்த் எம்.பி. முன் வைத்தார். சர்மா நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தில் ஆய்வுக்காக வருகை தந்த போது அவருடன் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது கன்னியாகுமரி மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.

அதில்; வேளாங்கண்ணி செல்ல வாராந்திர சிறப்பு ரயில் தேவையை வலியுறுத்தினேன். ஹைதராபாத் சென்னை சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது, திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பது போன்ற ரயில் நீட்டிப்பிற்கான கோரிக்கைகளை முன்‌ வைத்தார். அது‌ போன்று கோவிட் காலத்திற்கு முன் இருந்தது போன்று ரயில் நிறுத்தங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்கள் அதிகமாக பயணம் செய்யும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது நாகர்கோவில் ரயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்கிறது.

ராணுவ வீரர்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஏற்ப மாவட்டத்தில் இன்னும் ஒரு நிறுத்தம் தேவை. நாகர்கோவில் சந்திப்பு மற்றும் நாகர்கோவில் டவுன் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் இந்த ரயில் நிலையங்களை நவீன மயமாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கைகளை பரிசீலித்து ஆவன செய்யப்படும் என சர்மா உறுதி அளித்தார்.

The post நெல்லை வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்: விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Nagercoil ,Vijayvasant ,Nagercoil.… ,Vijayvasanth ,Dinakaran ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...