×

சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்

கூடலூர்: கூடலூர் மேற்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, கூடலூர் ஒக்கலிகர் ஏர் உழவர் சங்கம் நடத்திய இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சுருளிப்பட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவர் ராம்பா, செயலாளர் சரவணன், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன், கூடலூர் நகர திமுக செயலாளர் லோகத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 140க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் மற்றும் சாரதிகள் கலந்து கொண்டனர். இதில் தட்டன்சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, நடுமாடு, கரிச்சான்மாடு, பெரியமாடு என 6 வகையான பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ரொக்க பரிசுகளும், முதல் கொடியை வாங்கிய சாரதிகளுக்கு கோப்பை, குத்துவிளக்கு, அண்டா, உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன. மாடுகளின் பிரிவுகளை வைத்து போட்டியின் தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த போட்டியை கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

The post சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் appeared first on Dinakaran.

Tags : Koodalur ,Koodalur West Muthalamman Temple Festival ,Koodalur Okalikar Air Farmer's Association ,Dinakaran ,
× RELATED மச்சிக்கொல்லி பகுதியில் காலில்...