×

கல்லூரி மாணவி மாயம்

சேந்தமங்கலம், நவ.16: புதுச்சத்திரம் அடுத்து உள்ள பிள்ளாநல்லூர் மலைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சின்னபாப்பா(39). இவர்களுக்கு இந்திரஜித் (21) என்ற மகனும், ஜீவிதா(19) என்ற மகளும் உள்ளனர். ஜீவிதா திருச்செங்கோடு தனியார் இன்ஜினியரிங் காலேஜில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த தீபாவளி விடுமுறை அன்று, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜீவிதாவை அதிகாலையிலிருந்து காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், புதுச்சத்திரம் போலீசில் புகாரளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து, மாணவியை தேடி வருகிறார்.

The post கல்லூரி மாணவி மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Senthamangalam ,Pillanallur ,Puduchattaram ,Chinnapappa ,
× RELATED பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் பாஜ பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை