×

பெரம்பலூர் அருகே மூதாட்டி வீட்டில் 3 பவுன் நகை திருட்டு

 

பெரம்பலூர்,நவ.15: பெரம்பலூர்அருகே வீட்டு பூட்டை உடைத்து 3 பவுன் நகையை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெரம்பலூர் அருகேயுள்ள ஆலம்பாடி ஊராட்சி, சொக்கநாதபுரம் கிராமம், சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி செல்லம்(70).இவரது மூத்த மகன் ரமேஷ் திருச்சியில் தங்கி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 2வது மகன் சதீஸ் வெளிநாட்டில் வேலை செய்கிறார். செல்லம் அடிக்கடி திருச்சியிலுள்ள மகன் ரமேஷ் வீட்டிற்கு சென்று விடுவார்.எப்போதாவது சொக்கநாதபுரத்திற்கு வந்தால் ஒரு வாரம் தங்கி விட்டு செல்வது வழக்கம்.

இவ்வாறு 20 நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு சென்றிருந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் 13ம் தேதி இரவு 8.45 மணியளவில் செல்லம் வீட்டுக்கு லைட் போட அருகேயுள்ள நல்லதம்பி மனைவி சர்மிளா என்பவர் சென்றார். அப்போது வீட்டுக் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து செல்லத்திற்கு தகவல் அளித்தார்.இதையடுத்து செல்லம் அங்கு வந்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த அரை பவுன் தாலி, 2 பவுன் எடை கொண்ட 3 மோதிரங்கள், அரை பவுன் காசு என 3 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.இது குறித்து செல்லம் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் எஸ்ஐ சரவணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post பெரம்பலூர் அருகே மூதாட்டி வீட்டில் 3 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Moodati ,Perambalur ,Moodati House ,
× RELATED மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து மூதாட்டி பலி