×

மணிப்பூரை சேர்ந்த 4 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

மணிப்பூர்: மணிப்பூரை சேர்ந்த 4 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் விடுதலை ராணுவம்(PLA), அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணிக்கு(RPF) மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி(UNLF), மணிப்பூர் மக்கள் ராணுவம்(MPA) ஆகியவற்றுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றவில்லை என்பதால் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post மணிப்பூரை சேர்ந்த 4 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Union Ministry of Interior ,Manipur ,Union Interior Ministry ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...