×

தோஷகானா ஊழலில் பறிமுதல்; நவாஸ் ஷெரீப் சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துகளை திரும்ப ஒப்படைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்(73) ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். பின்னர் சிகிச்சைக்காக 2019ம் ஆண்டு லண்டன் சென்ற அவர் நாடாளுமன்ற தேர்தலுக்காக அக்டோபர் 21ம் தேதி நாடு திரும்பினார். நாடு திரும்பிய நவாஸ் தோஷகானா ஊழல் வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் அக்டோபர் 25ம் தேதி ஆஜரானார். அப்போது தோஷகானா வழக்கில் நவாசுக்கு எதிரான கைது வாரண்ட் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நவாசிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அசையும், அசையா சொத்துகள் அனைத்தையும் திரும்ப ஒப்படைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post தோஷகானா ஊழலில் பறிமுதல்; நவாஸ் ஷெரீப் சொத்துக்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Toshakan scandal ,Nawaz Sharif ,Islamabad ,Pakistan ,Toshakan ,Dinakaran ,
× RELATED சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்