×

மூளை காய்ச்சல் பாதித்த பள்ளி மாணவன் சாவு

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேட்டமலையை சேர்ந்தவர் கருப்பசாமி. பட்டாசு ஆலை தொழிலாளி. இவரது மகன் நிதீஷ்குமார் (10) மேட்டமலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிதீஷ்குமாரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். காய்ச்சல் குறையாததால் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூளை காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நிதீஷ்குமார் நேற்று பரிதாபமாக இறந்தான்.

The post மூளை காய்ச்சல் பாதித்த பள்ளி மாணவன் சாவு appeared first on Dinakaran.

Tags : Chatur ,Mettamalai ,Chatur, Virudhunagar district ,Nitishkumar ,
× RELATED சாத்தூர் படந்தால் சந்திப்பில்...