×

இலுப்பூரில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்: தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு வழங்கினர்

 

விராலிமலை, நவ.9: இலுப்பூர் தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தவிழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி விபத்து இல்லாமல் எப்படி பண்டிகையை கொண்டாடுவது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இலுப்பூரில் வணிக கடைகள், வீடுகள் மற்றும் அரசு மகளிர் பள்ளி, பேருந்து பயணிகள் உள்ளிட்ட பகுதிகளில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, விபத்தின்றி பட்டாசு வெடிப்பது, எரிவாயு கசிவு, மின்கசிவு, எண்ணெய் பொருட்கள் தீப்பிடித்தல், வெடிவிபத்து போன்றவற்றை தவிர்ப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

The post இலுப்பூரில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்: தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Diwali ,Illupur ,department ,Viralimalai ,Ilupur Fire Department ,
× RELATED சென்னையில் பேருந்து நிறுத்தங்களில்...