- முல்லை பெரியார் அணை
- TTV.thinakaran
- யூனியன் அரசு
- சென்னை
- அமமுக
- பொதுச்செயலர்
- TTV
- தினகரன்
- ட்விட்டர்
- தமிழ்நாடு அரசு
- டி.டி.வி.தீனகரன்
- தின மலர்
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணையில் ஒன்றிய சுரங்கத்துறையின் கீழ் இயங்கும் தேசிய பாறை மற்றும் இயந்திரவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் முகாமிட்டு ஆய்வு மேற்கொள்வது அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. முல்லைப் பெரியாறு அணையில் திடீரென நடைபெற்ற ஆய்வுக்கான காரணத்தை விவசாயிகளுக்கு விளக்குவதோடு, ஐந்து மாவட்ட விவசாயிகளின் ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் மாநில உரிமையைப் பாதுகாக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post முல்லை பெரியாறு அணையில் நடக்கும் சோதனை என்ன? ஒன்றிய அரசுக்கு டிடிவி.தினகரன் கேள்வி appeared first on Dinakaran.