×

கொதித்து எழுந்த நெட்டிசன்கள் ராஜஸ்தானில் தண்டவாளத்தில் பாம்பு வெடி கொளுத்திய யூடியூபர்: ஆர்.பி.எப். போலீஸ் விசாரணை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தண்டவாளத்தில் பாம்பு மாத்திரை கொளுத்தி வீடியோ எடுத்த யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்க நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து ரயில்வே போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் அதிகளவிலான லைக்குகள் மற்றும் ஷேர்களை பெற விரும்பி சமீப காலமாக விளையாட்டுத்தனமான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் புலேரா-அஜ்மீர் பகுதியில் உள்ள தாந்த்ரா ரயில் நிலையத்தின் நடைபாதை மேடை மற்றும் தண்டவாளத்தில் யூடியூர் ஒருவர் பாம்பு மாத்திரையை பற்ற வைத்து அதிலிருந்து கரும்புகை வெளியேறும் 33 வினாடி வீடியோ வெளியானது.

சில மணி நேரத்தில் இந்திய ரயில்வே என்ற தலைப்பில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து, யூடியூபரின் இந்த நடவடிக்கைக்கு ஏராளமான நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கடுமையான தண்டனை வழங்கும்படியும் கொதித்து எழுந்தனர்.இதை அடுத்து, வட மேற்கு ரயில்வே நிர்வாகம் ஜெய்ப்பூர் டிவிஷனல் மேலாளரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.

The post கொதித்து எழுந்த நெட்டிசன்கள் ராஜஸ்தானில் தண்டவாளத்தில் பாம்பு வெடி கொளுத்திய யூடியூபர்: ஆர்.பி.எப். போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,RPF Police ,Jaipur ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் அருகே இந்திய...