×

அரியலூரில் கூட்டுறவு வார விழா ஆலோசனை கூட்டம்

 

அரியலூர், நவ.8: அரியலூரில் கூட்டுறவு வாரவிழா ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்ட மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மண்டல இணைப்பதிவாளர் தீபா சங்கரி தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் கொடியேற்றுதல், மரக்கன்று நடுதல், இரத்ததான முகாம், கால்நடை சிகிச்சை முகாம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்துதல் மற்றும் சிறந்த சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் அரியலூர் சரகத் துணைப்பதிவாளர் அறப்பளி, அரியலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் இளங்செழியன், இணைப்பதிவாளர் அலுவலக “ஆ“ கண்காணிப்பாளர் விவேக், அரியலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை செயலாட்சியர் சசிக்குமார், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு அச்சக செயலாட்சியர் நர்மதா, திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர் முல்லை, கூட்டுறவு சார்பதிவாளர் (பால்வளம்) விஜயா, திருச்சிராப்பள்ளி ஆவின் விரிவாக்க அலுவலர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அரியலூரில் கூட்டுறவு வார விழா ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Cooperative week festival ,Ariyalur ,70th ,All India Cooperative Week ,Dinakaran ,
× RELATED அரியலூர் அரசு ஐடிஐயில் மாணவர்கள்...