×

கோர்ட்டில் ஆஜராகாத வாலிபர் கைது

நெல்லை, நவ.8: பணகுடி அருகேயுள்ள அண்ணாநகர் கோவில்விளையைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ் (24). இவர் மீது கடந்த 2020ம் ஆண்டு பணகுடி காவல் நிலையத்தில் போக் சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் மாணிக்கராஜ் கைதாகி ஜாமீனில் உள்ளார். நெல்லை நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணைக்கு கடந்த 2 மாதங்களாக மாணிக்கராஜ் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனையறிந்த நெல்லை நீதிமன்றம் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு பணகுடி போலீசாருக்கு உத்தரவிட்டது. இதன்பேரில் போலீசார் மாணிக்கராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post கோர்ட்டில் ஆஜராகாத வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Nella ,Manikraj ,Annanagar Temple ,Panakudi ,Dinakaran ,
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது