- மு.கே ஸ்டாலின்
- புதுச்சேரி
- சபாநாயகர்
- கண்ணன்
- சென்னை
- முதல் அமைச்சர்
- புதுச்சேரி சபாநாயகர்
- புதுவாய் கண்ணன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மு.கே ஸ்டாலின்
சென்னை: புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் புதுவை கண்ணன் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநில முன்னாள் சட்டப் பேரவைத் தலைவரும், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் மக்களுக்காகப் பணியாற்றியவருமான புதுவை கண்ணன் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இளம்வயது முதல் பணியாற்றிய கண்ணன், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு புதுவை மக்களிடையே பெரிதும் பிரபலமும் செல்வாக்கும் நன்மதிப்பும் கொண்ட தலைவராக திகழ்ந்து வந்தவர். அவரது மறைவு புதுவை அரசியலில் எளிதில் ஈடுசெய்ய இயலாத இழப்பு. அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அரசியல் உலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.
