×

கைகுழந்தையுடன் இளம்பெண் மாயம்

கருங்கல், நவ.4 : கருங்கல் அருகே திக்கணங்கோடு மணலிக் காட்டுவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நிஷாந்த் (34). டெம்போ டிரைவர். இவரது மனைவி எல்சி (34). இவர்களுக்கு 11 வயதில் இரண்டு ஆண் குழந்தைகளும் , ஐந்து மாத ஆண் கைகுழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இரண்டு தினங்கள் முன்பு எல்சி தனது கணவருக்கு போன் செய்து உடல் நிலை சரியில்லை. கருங்கல் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறியுள்ளார். நிஷாந்த் வீட்டிற்கு வரும் போது வீட்டில் மனைவியை காணவில்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது போனை வீட்டிலேயே வைத்து விட்டு சென்றது தெரியவந்தது. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து நிஷாந்த் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

The post கைகுழந்தையுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Karungal ,Nishant ,Manalik Kattuvilai ,Thikkanankodu ,Karungal.… ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை