×

சார்ஜாவில் நாளை ஜோய் ஆலுக்காஸ் சுயசரிதை நூல் வெளியீடு: நடிகை கஜோல் பங்கேற்கிறார்

துபாய்: ஜோயாலுக்காஸ் குழுமத்தின் தலைவரும், பிரபல தொழில்முனைவோருமான ஜோய் ஆலுக்காஸ், தனது சுயசரிதை நூலை, ‘ஸ்ப்ரெடிங் ஜோய் – ஜோயாலுக்காஸ் எப்படி உலகின் பிடித்த நகைக்கடையாக உருவெடுத்தது’ – என்ற தலைப்பில் வெளியிட உள்ளார். இது நாளை (5ம் தேதி) மாலை 5 மணிக்கு சார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜோயாலுக்காஸின் பிராண்ட் அம்பாசிடர் நடிகை கஜோல் கவுரவ விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

ஜோயாலுக்காஸின் சுயசரிதை, தலைமைத்துவம், பிராண்ட் உருவாக்கம் மற்றும் நிலைத்தன்மை, கடினத்தன்மை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம் ஒரு இலக்கை இடைவிடாமல் எப்படி பின்தொடர்வது என்பது பற்றிய சிறந்த நுண்ணறிவுகளை வழங்குகிறது. இந்த புத்தகம் மலையாளம் மற்றும் அரபு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, புகழ்பெற்ற புத்தக வெளியீட்டாளரான ஹார்பர்காலின்ஸ் நிறுவனத்தால் சர்வதேச அளவில் வெளியிடப்படுகிறது. இது Amazon UAE, India, United Kingdom & United States மற்றும் பிற இ-காமர்ஸ் போர்டல்கள் மூலம் ஆன்லைனில் கிடைக்கிறது.

ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், ‘‘எங்கள் பிராண்டான ஜோயாலுக்காஸ் உலகின் மிகப்பெரிய தனிநபருக்கு சொந்தமான நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்ததற்கான வெற்றிக் கதையானாது ஒரே இரவில் நிகழ்ந்தது அல்ல. 2023 ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், முதன்முறையாக, என்னுடைய கஷ்டங்கள் மற்றும் இன்னல்கள் பற்றிய கதையையும், அசைக்க முடியாத நிலைத்தன்மையுடனும், உறுதியுடனும், எப்படி வெற்றியையும் முன்னேற்றத்தையும் அடைந்தோம் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என கூறியுள்ளார்.

The post சார்ஜாவில் நாளை ஜோய் ஆலுக்காஸ் சுயசரிதை நூல் வெளியீடு: நடிகை கஜோல் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : Joy Alukas ,Sharjah ,Kajol ,Dubai ,Joey Alukhas ,Joyalukhas Group ,Joy Alukhas ,
× RELATED கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா சாலைகளில் வெள்ளப்பெருக்கு!