×

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நவம்பர் 3-ல் மாநில கற்றல் அடைவு ஆய்வு தேர்வு

சென்னை: நவம்பர் 3-ல் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாநில கற்றல் அடைவு ஆய்வுத் தேர்வு நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாநில கற்றல் அடைவு ஆய்வுத் தேர்வு நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்திலுள்ள அரசு/ சென்னை/ ஆதிதிராவிட/ அரசு உதவி பெறும்/ தனியார்/ CBSE/KV பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 555 பள்ளிகளில், 963 வகுப்புகளுக்கு, 3,6 மற்றும் 9 வகுப்பு மாணவர்களுக்கு மாநில அடைவு ஆய்வு மொழிப்படம் மற்றும் கணிதப் பாடத்தில் State Educational Achievement Survey (SEAS) 03.11.2023 அன்று நடைபெறுகிறது.

இதில் சென்னை மாவட்டத்தில் 28471 மாணவ/மாணவிகள் எழுத உள்ளனர். இத்தேர்வு கண்காணிப்பு பணிக்காக DIET, TTI, B.Ed, M.Ed பயிற்சி மாணவர்கள் 1065 கள ஆய்வாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இதற்கான பயிற்சி வழங்கப்பட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நவம்பர் 3-ல் மாநில கற்றல் அடைவு ஆய்வு தேர்வு appeared first on Dinakaran.

Tags : State ,Chennai District ,Chennai ,State Learning Directory Study Exam ,Dinakaran ,
× RELATED வீட்டு வாசலில் உறங்கியவர்கள் மீது...