சென்னை: சாலை பாதிப்புகளை மக்கள் தெரிவிக்கும் வகையில் ‘நம்ம சாலை’ செயலியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிப்பதற்காக புதிய செயலி அமைக்கப்பட்டுள்ளது. சாலைகளிலுள்ள பள்ளங்களை புகைப்படத்துடன் செயலி மூலம் தெரிவித்தால் புகார் அதிகாரிகளை சென்றடையும். புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் மாநில, 72 மணி நேரத்தில் மாவட்ட சாலைகள் சரிசெய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
The post சாலை பாதிப்புகளை மக்கள் தெரிவிக்கும் வகையில் ‘நம்ம சாலை’ செயலியை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி..!! appeared first on Dinakaran.