×

புதியம்புத்தூரில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களிடம் குறைகளை கேட்ட சண்முகையா எம்எல்ஏ

ஓட்டப்பிடாரம், நவ. 1: புதியம்புத்தூரில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களிடம் சண்முகையா எம்எல்ஏ குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் பொதுமக்கள் புதியம்புத்தூர் நீராவிமேடு பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய எம்எல்ஏ, கோரிக்கைகள் அனைத்தையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு உடனிருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், கிரி, பணி மேற்பார்வையாளர் பரமசிவன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட வர்த்தகர் அணி முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதி ஜோசப்மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post புதியம்புத்தூரில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களிடம் குறைகளை கேட்ட சண்முகையா எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : Shanmugaiah MLA ,Nayambuthur ,Ottapidaram ,Shanmugaiah ,MLA ,
× RELATED ஓட்டப்பிடாரம் அருகே பேவர் பிளாக் சாலை பணி தொடக்கம்