×

தக்கலை அருகே கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து

குமாரபுரம்,நவ.1: தக்கலை அருகே காட்டாத்துறை பூச்சிக்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் (35). கூலித்தொழிலாளி. அவருக்கு சொந்தமாக 4 ஆட்டோக்களும், ஒரு பைக்கும் இருந்தது. ஆனால் முன்விரோதம் காரணமாக அவையனைத்தையும் காட்டாத்துறையை சேர்ந்த டென்னிஸ் முருகன் (48) என்பவர் தீயிட்டு கொளுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு தக்கலை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அனிஷ் கொற்றைவிளை பகுதியில் உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வந்த டென்னிஸ் முருகன் மீண்டும் தகராறு செய்துள்ளார். மேலும் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென அனிஷ் தலையில் ஓங்கி குத்தினார். இதில் நிலைகுலைந்து போன அனிஷ் கீழே விழுந்தார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத டென்னிஸ் முருகன் கீழே கிடந்த கற்களை எடுத்து அனிஷ் மீது வீசினார். கத்திக்குத்து மற்றும் கல்வீச்சால் அனிசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அனிஷை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அனிஷ் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து டென்னிஸ் முருகனை தேடி வருகின்றனர்.

The post தக்கலை அருகே கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Tags : Thakkala ,Kumarapuram ,Anish ,Kattura Poochikattuvilai ,Thakala ,Takkala ,Dinakaran ,
× RELATED குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி