×

மணல் திருடிய 6 பேர் மீது வழக்கு

 

ஏழாயிரம்பண்ணை, அக்.31: அரசு அனுமதியின்றி மணல் அள்ளிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலங்குளம் அருகே கீழாண்மறைநாடு பகுதியில் சட்டவிரோதமாக மணல் மற்றும் கிராவல் திருட்டு நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆலங்குளம் காவல் ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது கீழாண்மறை நாடு பகுதியில் ராமசுப்பு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளியது தெரிய வந்தது. மேலும் மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டர், ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரி ஆகியவைகளை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர்கள் சுந்தர்ராஜன், சரவணக்குமார், ஈஸ்வரன், சதீஷ்குமார், மாரீஸ்வரன் மற்றும் நில உரிமையாளர் ராமசுப்பு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

The post மணல் திருடிய 6 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Ejayarampannai ,Geezhalmikanadu ,Alankulam ,Dinakaran ,
× RELATED வல்லம்பட்டி பகுதியில் புதர்மண்டி...