×

மதுரை தனியார் பள்ளி +2 தேர்வு மாணவர் வினாத்தாள் முறைகேடு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

மதுரை: மதுரை தனியார் பள்ளி மாணவர் பிளஸ் 2 தேர்வு எழுதியதில் முறைகேடு குறித்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். அரசுத்தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடு செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். +2 தேர்வு முறைகேடு குறித்து உடனே மாவட்ட குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிபிசிஐடி கூடுதல் இயக்குனர் விசாரணை நடத்தி 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

The post மதுரை தனியார் பள்ளி +2 தேர்வு மாணவர் வினாத்தாள் முறைகேடு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Madurai Private School ,CBCIT ,Madurai ,CBCID ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை