×

கீரனூரில் இருந்து தாயினிப்படி வழியாக இலுப்பூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்

புதுக்கோட்டை: கீரனூரில் இருந்து தாயினிப்படி, கருப்பாடிபட்டி வழியாக இலுப்பூர், அன்னவாசல் வழித்தடத்தில் புதிய பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேருந்து நிலையத்தில் இருந்து குளத்தூர் அத்திரிவயல், தாயினிப்படி, பெருங்குடிப்படி கருப்பாடிபட்டி, சித்துப்பட்டி ஆகிய ஊர்கள் வழியாக அன்னவாசல், இலுப்பூர் பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளது. அனைத்து கிராம மக்களும் இந்த வழித்தடத்தில் வரும் பேருந்துகளை பயனித்துதான் கீரனூர் நகர் பகுதிக்கு வர வேண்டும்.

The post கீரனூரில் இருந்து தாயினிப்படி வழியாக இலுப்பூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kiranur ,Illupur ,Thainipedi ,Pudukottai ,Keeranur ,Thainipadi ,Ilupur ,Karupadipatti ,Annavasal ,
× RELATED மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்