×

விழுப்புரத்தில் பாஜ ஆர்ப்பாட்டத்துக்கு நடிகை நமீதாவை அழைத்தும் காலியாக கிடந்த நாற்காலிகள்: காலைபிடிக்கிறேன் வாருங்கள் என மாவட்ட தலைவர் கெஞ்சல்

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி திடலில் பாஜ சார்பில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேடை போட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. நடிகை நமீதாவை அழைத்து பொதுக்கூட்டம் போல ஏற்பாடு செய்திருந்தனர். காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் துவங்கிய நிலையில், முக்கிய நிர்வாகிகள் மட்டுமே வந்திருந்தனர். மகளிர் அணியினர், கட்சியினர் வராததால் நாற்காலிகள் காலியாகவே கிடந்தது. இதனால் ஆர்ப்பாட்டத்துக்கு வந்த நடிகை நமீதா, சிறிதுநேரம் காரிலேயே அமர்ந்திருந்தார்.

தொடர்ந்து மாவட்ட தலைவர் கலியவரதன் மைக்கில், காலியாக உள்ள நாற்காலியில் வந்து உட்காருங்கள், உங்கள் காலை பிடித்து கேட்டுக்கொள்கிறேன் என்று அழாதகுறையாக கெஞ்சிக்கொண்டிருந்தார். நேரம் ஆகவே காரிலிருந்து நடிகை நமீதா மேடைக்கு வந்தார். கூட்டம் சேராததால் 3 நிமிடத்தில் தனது பேச்சை முடித்து சென்றுவிட்டார். பாஜ ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டம் சேராதென்று நடிகையை அழைத்தும் பயனில்லை. கடைசியில் சாலையோரம் சென்றவர்களும், நமீதாவை பார்க்க வந்த சிலபேரும் தான் பங்கேற்றதாக அக்கட்சியினர் புலம்பி சென்றனர். காலியாக இருந்த நாற்காலியை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளரை, மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் தடுத்து தகராறும் செய்தனர்.

The post விழுப்புரத்தில் பாஜ ஆர்ப்பாட்டத்துக்கு நடிகை நமீதாவை அழைத்தும் காலியாக கிடந்த நாற்காலிகள்: காலைபிடிக்கிறேன் வாருங்கள் என மாவட்ட தலைவர் கெஞ்சல் appeared first on Dinakaran.

Tags : Actress ,Namitha ,BJP ,Villupuram ,Nameetha ,
× RELATED பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை...